தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

வடபத்திரகாளியம்மன் கோயிலில் வாகனம் நிறுத்துமிடம் அமைக்க மேயர் நேரில் ஆய்வு

 

தஞ்சாவூர், ஜூலை 11: தஞ்சை கீழவாசலில் உள்ள வடபத்ரகாளியம்மன் கோயில் அரண்மனை தேவஸ்தானத்தின் கீழ் உள்ள 88 கோயில்களுள் ஒன்றாகும். பிரசித்தி பெற்ற இந்த கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இருந்தாலும் வாகனம் நிறுத்துமிடம் இல்லாததால் பக்தர்களின் வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்படுகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த நிலையில் வடபத்திரகாளியம்மன் கோயிலில் வாகனம் நிறுத்துமிடம் அமைப்பது தொடர்பாக மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், ஆணையர் கண்ணன் ஆகியோர் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

கோயிலுக்கு அருகே கோயிலுக்கு சொந்தமான 1¼ ஏக்கர் இடம் உள்ளது. இந்த இடம் புதர் மண்டி, சீமைக்கருவேல மரங்கள் நிறைந்து காணப்படுகிறது. அந்த இடத்தில் மாநகராட்சி மூலம் சுற்றுச்சுவர் அமைத்து வாகன நிறுத் துமிடம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. ஆய்வின் போது அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜிராஜா போன்ஸ்லே, மாநகர் நல அலுவலர் நமச்சிவாயம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Related News