தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தென்காசி அருகே கயிறு ஆலையில் பயங்கர தீ விபத்து

தென்காசி,பிப்.26: தென்காசி அடுத்த இலத்தூர் விலக்கு பகுதியில் கூந்தல் மற்றும் கயிறு தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல லட்ச ரூபாய் மதிப்புடைய இயந்திரங்கள் மற்றும் தென்னந்தும்பு சேதமடைந்தது. தென்காசியை அடுத்த இலத்துரை சேர்ந்த கந்தசாமி என்பவருக்கு சொந்தமான தென்னந்தும்பு தொழிற்சாலை மற்றும் கயிறு தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இங்கு நேற்று மாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் பணியாளர்கள் அலறி அடித்து ஓடினர். இது குறித்து தென்காசி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மூன்று மணிநேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர். எனினும் பல லட்ச ரூபாய் மதிப்புடைய இயந்திரங்கள் மற்றும் தென்னந்தும்பு ஆகியவை தீ விபத்தில் சேதம் அடைந்தது. மின் கசிவு காரணமாக தீ விபத்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது குறித்து இலத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Advertisement