தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பிரபல சூப்பர் மார்க்கெட்டில் பயங்கர தீ விபத்து: பல லட்சம் பொருட்கள் சாம்பல்

 

Advertisement

பண்ருட்டி, செப். 10: பண்ருட்டி பேருந்து நிலையம் பின்புறம் உள்ள பிரபல சூப்பர் மார்க்கெட்டில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இதில் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலானதாக கூறப்படுகிறது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி பேருந்து நிலையத்தின் பின்புறம் பேருந்துகள் வெளியே வரும் வழியில் அன்னை இந்திராகாந்தி சாலையில் பிரபல சூப்பர் மார்க்கெட் இயங்கி வருகிறது. நேற்று காலை 9 மணி அளவில் இந்த கட்டிடம் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

இதையடுத்து அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் அலறி அடித்துக்கொண்டு வெளியே ஓடிவந்தனர். உடனடியாக பண்ருட்டி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் பண்ருட்டி, நெல்லிக்குப்பம், முத்தாண்டிக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். அப்போது அப்பகுதியில் திரண்ட பொதுமக்களை போலீசார் அப்புறப்படுத்தினர். மேலும் போக்குவரத்தும் மாற்றிவிடப்பட்டது.

இந்த தீவிபத்தில் சூப்பர் மார்க்கெட்டில் இருந்த பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலானது. காலை 9 மணி அளவில் கடை திறந்தபோது ஏற்பட்ட தீவிபத்தால் குறைந்த அளவு ஊழியர்களே உள்ளே இருந்ததால் அவர்கள் உடனடியாக வெளியே ஓடிச்சென்று உயிர் தப்பினர். மதிய நேரம் நடந்திருந்தால் பெரிய அளவில் அசம்பாவிதம் நிகழ்ந்திருக்கும் என போலீசார் தெரிவித்தனர். பேருந்து நிலையம் பின்புறம் பிரபல வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீவிபத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement

Related News