தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தெங்கம்புதூர், ஆலங்கோட்டையில் உள்ள மதுபான கடைகளை மாற்ற வேண்டும் கலெக்டரிடம் மார்க்சிஸ்ட் கோரிக்கை

நாகர்கோவில், மே 24: தெங்கம்புதூர், ஆலங்கோட்டை ஆகிய பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள மதுக்கடைகளை மாற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கலெக்டரிடம் கோரிக்கை வைத்துள்ளனர். குமரி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயற்குழு உறுப்பினர் கண்ணன் தலைமையில் நிர்வாகிகள் சிவகோபன், ஜெபமணி, குமரேசன், பவிதா, சொர்ணம் மற்றும் ரத்தினம் நாடார், சுரேஷ் ஆகியோர் நேற்று கலெக்டரிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: குமரி மாவட்டத்தில் தெங்கம்புதூர், ஆலங்கோட்டை பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக இரண்டு மதுபானக்கடை உள்ளது. தெங்கம்புதூர் மதுபானக்கடையிலிருந்து சுமார் 100 மீட்டர் தூரத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. மாணவர்கள் மதுக்கடையை கடந்து பள்ளிக்கு வருவதும் பின் வீடுகளுக்கு செல்வதுமாக உள்ளனர். அதுபோன்று ஆலங்கோட்டை மதுபானக்கடை முக்கிய சந்திப்பில் உள்ளது.

Advertisement

இதன் அருகில் பெண்கள் பணிபுரியும் நிறுவனங்கள். பள்ளி கூடங்கள், அரசு நிறுவனங்கள், கோவில் உள்ளன. காலை மற்றும் மாலை நேரங்களில் பேருத்துகளுக்காக அதிகமான பயணிகளும் வந்து செல்கின்றனர். இந்தநிலையில் மதுபானக்கடைகளுக்கு மது வாங்க வரும் மதுப்பிரியர்களின் செயல் மக்களுக்கு பெரும் இடையூறாக உள்ளது. மதுப்பிரியர்கள் ரகளையில் ஈடுபடுவது. தகாத வார்த்தைகளால் பேசுவது போன்ற அசிங்கமான செயல்களால் கல்லூரி மாணவிகள், பெண்கள் அவதி அடைந்து வருகின்றனர். ஆகவே தெங்கம்புதூர், ஆலங்கோட்டையில் உள்ள 2 மதுபானக்கடைகளையும் வேறு இடத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

Related News