தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

புதிய ரேஷன் கடை திறப்பு மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சி பிரசாரம்

அரூர், ஜூன் 20: ஒன்றிய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை விளக்கியும், தமிழக அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற கோரியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மொரப்பூர் ஒன்றியத்தில் மக்கள் சந்திப்பு பிரசாரம் நடந்தது. பிரசாரத்தில், தர்மபுரி மாவட்டத்தில் காவிரி உபரி நீர் திட்டம் ஈச்சம்படி அணையில் இருந்து நீரேற்றம் மூலம், மொரப்பூர் பகுதி ஏரிகளில் தண்ணீர் நிரப்பும் திட்டம், சென்னாக்கல் அணைக்கட்டு நிட்டம் ஆசியவற்றை உடனடியாக செயல்படுத்த வேண்டும். தர்மபுரி- மொரப்பூர் ரயில் இணைப்பு, மொரப்பூர் வழியாக அதிகாலை 3.30 மணிக்கு சென்னை செல்லும் மங்களூர் ரயிலை மீண்டும் மொரப்பூரில் நிறுத்த வேண்டும் என பல்வேறு கோரிக்களை வலியுறுத்தியும், ஒன்றிய அரசின் மக்கள் விரோத கொள்கைகள் குறித்து பிரசாரத்தில் விளக்கினர்.

Advertisement

பிரசாரத்திற்கு ஒன்றிய செயலாளர் தங்கராசு தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் குமார், மாவட்ட செயலாளர் சிசுபாலன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் மல்லிகா, மாவட்டக்குழு உறுப்பினர் மல்லையன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் மாது, ராமன், ஹானஸ்ட் ராஜ், மாதேஷ், தாமரைச்செல்வன், கர்னல் ஜோதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர். மொரப்பூர் ஒன்றியம், ஜடையம்பட்டியில் தொடங்கிய பிரசாரம், ஆர்.கோபிநாதம்பட்டி, போளையம்பள்ளி, பொம்மிட்டி, நவலை, செங்குட்டை, கே.ஈச்சம்பாடி, கம்பைநல்லூர், சாமண்டஅள்ளி பெரியார் நகர், தொட்டம்பட்டி, மொரப்பூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பிரசாரம் நடந்தது.

Advertisement

Related News