தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருமணம் செய்துகொள்ள இருந்த நிலையில் காதலி பேச மறுத்ததால் வாலிபர் தற்கொலை

Advertisement

திருவொற்றியூர்: திருமணம் செய்துகொள்ள இருந்த நிலையில் காதலி பேச மறுத்ததால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மணலி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. மணலி, சின்னசேக்காடு குளக்கரை தெருவைச் சேர்ந்த ரகு என்பவரின் மகன் ஆனந்த் (26). அதே பகுதியில் உள்ள மெக்கானிக் கடையில் பணியாற்றி வந்தார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரை கடந்த 3 வருடங்களாக காதலித்து வந்தார்.

இருவரும் திருமணம் செய்து கொள்ளவும் முடிவு செய்து இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக ஆனந்த்தின் காதலி அவரிடம் சரியாக பேசாமல் தவிர்த்து வந்துள்ளார். மேலும் திருமணம் செய்து கொள்ள மறுப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ஆனந்த் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், தனது அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவலறிந்த மாதவரம் பால்பண்ணை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஆனந்த்தின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். காதலி பேச மறுத்ததால் வாலிபர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Advertisement

Related News