தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆட்டோ-கார் மோதிய விபத்தில் சாலையில் சிதறிய மாங்காய்கள் வேலூர் கிரீன் சர்க்கிள் மேம்பாலத்தில்

வேலூர், ஜூன் 18: வேலூர் கிரீன் சர்க்கிள் மேம்பாலத்தில் ஆட்டோ-கார் மோதி விபத்தில் சாலையில் மாங்காய்கள் சிதறியது. அரக்கோணத்தை சேர்ந்தவர் சங்கர்(28), சரக்கு ஆட்டோ டிரைவர். இவர் நேற்று ஆற்காட்டில் இருந்து வேலூர் மாங்காய் மண்டிக்கு மாங்காய்களை ஏற்றிக்கொண்டு சரக்கு ஆட்டோவை ஓட்டி வந்தார். அதேபோல சென்னையில் இருந்து பெங்களூரு நோக்கி கார் ஒன்று சென்றது. வேலூர் கிரீன் சர்க்கிள் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் சென்ற போது திடீரென எதிர்பாராத விதமாக காரும் ஆட்டோவும் மோதியதில் சரக்கு ஆட்டோவில் இருந்த மாங்காய்கள் சாலையில் சிதறின. மோதிய வேகத்தில் காரும் சென்டர் மீடியனில் மோதி நின்றது.இதில் காரின் முன் பக்கம் அப்பளம் போல் நொறுங்கியது. அப்போது, அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகள் நின்று சாலையில் சிதறி கிடந்த மாங்காய்களை அப்புறப்படுத்தி சாலையோரம் குவித்தனர். மேலும், விபத்து குறித்து தகவலறிந்த வேலூர் வடக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். இதில் ஆட்டோ டிரைவர் சங்கரும், காரில் வந்தவரும் லோசன காயங்களுடன் உயிர் தப்பினர். தொடர்ந்து, போலீசார் விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Related News