தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மந்திரிகிரி வேலாயுதசாமி கோயில் தேர் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது

சூலூர், பிப். 6: சுல்தான்பேட்டை ஒன்றியம் செஞ்சேரி மலையில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான பிரசித்தி பெற்ற மந்திரகிரி வேலாயுத சுவாமி கோயில் உள்ளது. இந்த கோயிலின் தைப்பூசத் தேர் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. கர்ப்ப கிரகத்தின் முன் உள்ள கொடி மரத்தில் தேர் திருவிழா துவக்க நிகழ்வாக வேத மந்திரங்கள் ஓத கொடியேற்றப்பட்டது. வரும் 11ம் தேதி திருவிழாவின் முக்கிய நிகழ்வான தைப்பூச தேரோட்டம் நடைபெற உள்ளது. இதில், மக்கள் பிரதிநிதிகள், பக்தர்கள், கோயில் நிர்வாகிகள் என ஆயிரக்கணக்கானோர் பங்கேற்கின்றனர்.

Advertisement

நேற்று நடைபெற்ற கொடியேற்று விழா நிகழ்ச்சியில் சுல்தான்பேட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் முத்துமாணிக்கம் மற்றும் கோயில் அறங்காவலர் குழு தலைவர் பழனிச்சாமி, அறங்காவலர்கள் ஈஸ்வரன், விவேகானந்தன், நிர்மலா தேவி, ராஜேந்திரன் செயல் அலுவலர் ராஜகுரு உள்ளிட்டோர் கலந்துகொண்டு திருவிழா கொடி ஏற்றினர். இந்த கொடியேற்ற நிகழ்ச்சிக்கு சிவாச்சாரியார்கள் சுந்தர மூர்த்தி மற்றும் முத்துக்குமார் தலைமையிலான சிவாச்சாரியார்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியையொட்டி சுற்றுப்புற கிராமங்களில் இருந்து 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Advertisement

Related News