தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆடுகள் மேய்த்த தகராறில் விவசாயியை வெட்டியவருக்கு 6 ஆண்டுகள் சிறை

உளுந்தூர்பேட்டை, ஜூலை 1: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது பழங்குணம் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் சிவலிங்கம் (60) விவசாயி. இவரது மகள் ராஜேஸ்வரி என்பவர் கடந்த 1997ம் ஆண்டு ஆடுகளை ஓடை அருகே மேய்க்க சென்றுள்ளார். அப்போது ஆடுகள், அருகே உள்ள அயன்குஞ்சரம் கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் (64) என்பவரின் நிலத்தில் சென்று நெற்பயிரை மேய்ந்துள்ளது. இதையடுத்து கண்ணன் ஏன் நிலத்தில் ஆடுகளை மேய்கிறீர்கள் என ராஜேஸ்வரியின் தந்தை சிவலிங்கத்திடம் கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டதில் ஆத்திரமடைந்த கண்ணன் சிவலிங்கத்தை தாக்கி கத்தியால் வெட்டியுள்ளார். அப்போது தடுக்க வந்த, சிவலிங்கத்தின் மனைவி வீரம்மாளையும் (59) தாக்கி உள்ளார்.

Advertisement

இதில் சிவலிங்கம், அவரது மனைவி வீரம்மாள் ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர். உடன் அருகில் இருந்தவர்கள் அவர்கள் இருவரையும் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து சிவலிங்கம் கொடுத்த புகாரின் பேரில் எலவனாசூர்கோட்டை போலீசார் வழக்கு பதிந்து கண்ணனை கைது செய்தனர். இவ்வழக்கு விசாரணை உளுந்தூர்பேட்டை சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விவசாயி சிவலிங்கம் தரப்பில் அரசு வழக்கறிஞர் இளமுருகன் ஆஜரானார். இவ்வழக்கு விசாரணை நேற்று நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஆறுமுகம், கொலை முயற்சி வழக்கில் கண்ணனுக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூபாய். 5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இதையடுத்து கண்ணனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Advertisement