தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தொடர் கொள்ளையில் ஈடுபட்ட நபர் கைது

 

Advertisement

தம்மம்பட்டி, மே 28: சேலம் மாவட்டம், தம்மம்பட்டி அருகே செங்காடு பகுதியைச் சேர்ந்த பழனிமுத்து என்பவர் வீட்டில், கடந்த 19ம் தேதி இரவு, பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம கும்பல், பீரோவில் இருந்த 17பவுன் நகை, ₹70 ஆயிரத்தை திருடி சென்றனர். இது குறித்து, பழனிமுத்து தம்மம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தார். அதன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொள்ளையர்களை தேடி வந்தனர். இந்த நிலையில், ஆத்தூர் எம்ஜிஆர் நகர் விநாயகர்புரத்தை சேர்ந்த பெருமாள் மகன் தேவா(35) என்பவர், இந்த கொள்ளையில் ஈடுபட்டது போலீசாருக்கு தெரியவந்தது.

இதனையடுத்து, அங்கு விரைந்த போலீசார், தேவாவை நேற்று கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில், தனியாக இருக்கும் வீடுகளின் பூட்டை உடைத்து திருடுவதை, அவர் வழக்கமாக கொண்டிருந்தது தெரியவந்தது. மேலும், வாழப்பாடி, மங்களபுரம், கள்ளக்குறிச்சி, கச்சிராபாளையம், ஆத்தூர் போன்ற பகுதிகளில் வீடு புகுந்து நகை மற்றும் பணத்தை திருடியதையும் அவர் ஒப்புக்கொண்டார். இதையடுத்து, அவரிடம் இருந்து 50பவுன் நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர், அவரை ஆத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

Advertisement

Related News