தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆரணி அருகே நெசவுத்தொழிலாளி வீட்டில் 5 சவரன் நகை திருடியவர் கைது

ஆரணி, ஜூன் 16: ஆரணி அருகே நெசவுத்தொழிலாளி வீட்டில் 5 சவரன் நகை திருடியவரை போலீசார் நேற்று கைது செய்தனர். ஆரணி அடுத்த வடுக்கசாத்து கிராமத்தை சேர்ந்தவர் சாந்தகுமார்(40), நெசவுத்தொழிலாளி. இவரது மனைவி சரிதா. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கடந்த 12ம் தேதி சாந்தகுமார் வழக்கம்போல் நெசவு வேலைக்கு சென்றுள்ளார். அவரது மகன், மகள் பள்ளிக்கு சென்றதால் மனைவி சரிதா வீட்டை பூட்டிக்கொண்டு விவசாய வேலைக்கு சென்றுள்ளார்.

Advertisement

பின்னர், மாலை இருவரும் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்தனர். அப்போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் வைத்திருந்த 5 சவரன் நகையை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து சாந்தகுமார் கொடுத்த புகாரின்பேரில் ஆரணி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று அதே கிராமத்தை சேர்ந்த நெசவுத்தொழிலாளி பாபு(40) என்பவரை சந்தேகத்தின்பேரில் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அதில், சாந்தகுமார் வீட்டின் பூட்டை உடைத்து நகையை திருடிச்சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், அவரிடம் இருந்து நகையை மீட்டனர். பின்னர், பாபுவை கைது செய்து வந்தவாசி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Advertisement

Related News