தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஹாசிஸ் ஆயில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது

பாலக்காடு, ஜூன் 6: கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் கொடுங்கல்லூர் அருகே கய்பமங்கலம் பகுதியில் ஹாசிஸ் ஆயில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட வாலிபரை கலால்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.  இவரிடமிருந்து 34 கிராம் ஹாசிஸ் ஆயில் டப்பாக்கள் பறிமுதல் செய்யப்பட்டது. உயர் ரக போதைப்பொருள் என்பதால் இதன் மதிப்பு லட்சக்கணக்கான ரூபாய் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர். கொடுங்கல்லூர் அருகே கும்பளத்துப்பரம்பு என்ற பகுதியில் கொடுங்கல்லூர் ரேஞ்சு இன்ஸ்பெக்டர் பிரதீப் தலைமையில் காவலர்கள் வாகன பரிசோதனையில் நேற்று முன்தினம் இரவு ஈடுபட்டினர்.

Advertisement

அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த வாலிபர் மன்னார்க்காட்டை சேர்ந்த முகமது (27) என்பவரை தடுத்து அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் அவர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தார். இதனால் சந்தேகமடைந்த காவலர்கள் அவரது உடமைகளை பரிசோதனை செய்தனர். இதில் 34 கிராம் ஹாசிஸ் ஆயில் உயர் ரக போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக முகமது மீது வழக்குப்பதிந்து கைது செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement