தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தவர் அதிரடி கைது

கண்டாச்சிபுரம், மே 20; கண்டாச்சிபுரம் அருகே 2,500 கிலோ ரேஷன் அரிசி வெளி மாநிலங்களுக்கு கடத்தி செல்ல பதுக்கி வைத்திருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கண்டாச்சிபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்பட்டு வெளி மாநிலங்களுக்கு விற்பனை செய்வதாக விழுப்புரம் குடிமை பொருள் வழங்கல் குற்ற புல்லனாய்வு துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் உதவி ஆய்வாளர் கலா தலைமையிலான குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு கண்டாச்சிபுரம் அடுத்த அத்தியூர் திருக்கை கிராமத்தில் நேற்று தணிக்கை செய்தனர். அதில் அக்கிராமத்தை சேர்ந்த மாசிலாமணி என்பவரது வீட்டின் பின்புறம் 50 கிலோ எடை கொண்ட அரசு பொது விநியோக திட்ட ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

Advertisement

தொடர்ந்து அவரிடம், போலீசார் குறுக்கு விசாரணை நடத்தியதில், அதே கிராமத்தை சேர்ந்த இளவரசன் மகன் தாமோதரன் (28) என்பவர் அத்தியூர் திருக்கை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ரேஷன் அரிசி கடத்தி வெளி மாநிலமான புதுச்சேரியில் உள்ள மாவு கடைகளுக்கு அதிக விலைக்கு விற்க பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து தாமோதரன் வீட்டிலிருந்து சுமார் 50 கிலோ எடையுள்ள 50 ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து விழுப்புரம் குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை போலீசார், தாமோதரன் மீது வழக்குப்பதிந்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisement

Related News