தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ராஜபாளையம் ரயில் நிலையத்தில் டிக்கெட் எடுக்க வந்த பெண்ணிடம் ரூ.25 ஆயிரம் அபேஸ் செய்தவர் கைது: சிசிடிவி கேமராவால் சிக்கினார்

 

Advertisement

ராஜபாளையம், ஆக.31: ராஜபாளையம் அருகே சேத்தூர் கட்டபொம்மன் நகரை சேர்ந்தவர் தனலட்சுமி. இவர் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவில் வழிபாட்டு குழுவில் பொறுப்பாளராக உள்ளார். இவர் இரண்டு மாதங்களுக்குப் பிறகு தனது குழுவினருடன் கோவிலுக்கு செல்ல ரயிலில் முன்பதிவு செய்வதற்காக ரூ.25 ஆயிரத்தை பையில் எடுத்துக்கொண்டு தனது உறவினர்கள் 2 பேருடன் நேற்று முன்தினம் மாலை ராஜபாளையம் ரயில் நிலையத்திற்கு வந்துள்ளார்.

முன்பதிவு செய்யும் இடத்திற்கு அருகே அமர்ந்து விண்ணப்பத்தை எழுதி விட்டு தான் கொண்டு வந்த பையை இருக்கையில் வைத்துவிட்டு முன்பதிவுக்காக உறவினர்களுடன் வரிசையில் நின்றார். அப்போது ரயில் பயணிகளை நோட்டம் விட்டுக் கொண்டிருந்த நபர் ஒருவர் தனலட்சுமி இருக்கையில் வைத்திருந்த பையை பணத்துடன் திருடிச் சென்றுவிட்டார். இந்த சம்பவம் ரயில் நிலைய கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.

கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில் மர்மநபர் தென்காசி மாவட்டம் சிவகிரி அடுத்த ராமச்சந்திராபுரத்தை சேர்ந்த கருப்பசாமி மகன் சண்முகசுந்தர பாண்டி(50) என்பது தெரியவந்தது. இதனையடுத்து தகவலறிந்த ராஜபாளையம்(தெற்கு) குற்றப்பிரிவு போலீசார் அவரை கைது செய்து, ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவரிடமிருந்து ரூ.24 ஆயிரம் மற்றும் கைப்பையை பறிமுதல் செய்தனர்.

Advertisement

Related News