தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இலவச வீட்டுமனை பட்டா கோரி தாசில்தார் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம்: வாடிப்பட்டியில் பரபரப்பு

வாடிப்பட்டி, செப். 26: இலவச வீட்டு மனை பட்டா வழங்கும்படி கேட்டு, வாடிப்பட்டி தாசில்தார் அலுவலகத்தில் குடியேற முயன்ற கிராம மக்களால் பரபரப்பு ஏற்பட்டது. வாடிப்பட்டி தாலுகா அலங்காநல்லூர் ஒன்றியம் கொண்டையம்பட்டி கிராமத்தில் வாசித்து வரும் ஆதி திராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு வாடிப்பட்டி தாசில்தார் அலுவலகத்தில் மனு கொடுத்திருந்தனர்.

Advertisement

கடந்த டிசம்பர் மாதம் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு குடியேறும் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது அதிகாரிகள் விரைவில் பட்டா வழங்கப்படும் என்று கூறி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தனர். இந்நிலையில் அதன்பிறகும் பட்டா கிடைக்காததால் நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக உடனடியாக பட்டா வழங்க கோரி வாடிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் அப்பகுதி மக்கள் ஈடுபட்டனர். மேலும் தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்ட அவர்கள் அங்கேயே உணவு சமைக்க துவங்கினர்.

இதையடுத்து வருவாய்த் துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பட்டா கிடைக்கும் வரை கலைந்து செல்ல மாட்டோம் என, பொதுமக்கள் கூறியதுடன், மதிய உணவு சமைத்து சாப்பிட்டனர். பின்னர் நடந்த பேச்சு வார்த்தையின் முடிவில், இரண்டு மாத கால அவகாசத்தில் பட்டா வழங்கப்படும் என வருவாய்த்துறையினர் எழுத்து மூலமாக உறுதி அளித்தனர்.

இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றிய குழு உறுப்பினர் பஞ்சாட்சரம் தலைமை வகித்தார். மதுரை புறநகர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் இளங்கோவன், மாவட்ட குழு உறுப்பினர் உமா மகேஸ்வரன், அலங்காநல்லூர் ஒன்றிய செயலாளர் தவமணி, ஒன்றிய குழு உறுப்பினர்கள் ஞானவேல், மணல் பாண்டி, தனம், தங்கராசு உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

 

Advertisement