தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தனிப்படையினர் சோதனையில் ரயில்களில் கடத்தி வந்த 16 கிலோ கஞ்சா சிக்கியது

மதுரை, அக். 24: மதுரை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவின் தனிப்படையினர் நடத்திய அதிரடி சோதனை வாயிலாக ரயில்களில் கடத்திய 16 கிலோ 350 கிராம் கஞ்சாவை பறிமுதலானது. ரயில்களில் கஞ்சா கடத்தலை தடுக்க, மாவட்ட எஸ்பி அறுவுறுத்தலின் பேரில், தனிப்படை அமைக்கப்பட்டது. இதன்படி இன்ஸ்பெக்டர் கண்ணத்தாள் தலைமையிலான தனிப்படையினர் தங்களுக்கு கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில் மதுரை ரயில் நிலையம் வந்தனர்.

Advertisement

அங்கு மேற்கு வங்கம், புருளியாவிலிருந்து தென்காசி சென்ற வாராந்திர ரயிலில், முன்பதிவு இல்லாத பயணிகள் பெட்டியில் சோதனை செய்தனர். இதில், கேட்பாரற்று கிடந்த பேக்கில் 4 பார்சல்களில் மொத்தம் 7.750 கிலோ கஞ்சாவை கைப்பற்றினர். இதே ரயிலில் பயணித்த பீகாரைச் சேர்ந்த ஸ்ரீசான்ராம்(40) என்பவரிடம் 5.600 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தது அவற்றை பறிமுதல் செய்த போலீசார் அந்த நபரை கைது செய்தனர்.

இதேபோல் இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான தனிப்படையினர் குருவாயூர் வாராந்திர ரயிலில், முன்பதிவில்லாத பயணிகள் பெட்டியில் நடத்திய சோதனையில் 2 பார்சல்களில் மொத்தம் 3 கிலோ கஞ்சாவை கைப்பற்றினர். இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து, கஞ்சா கடத்தியவர்களை தேடி வருகின்றனர்.

 

Advertisement