தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தத்தனேரி மயான வளாகத்தில் குப்பை இடமாற்று நிலையம் அமைக்க தடை கோரி வழக்கு: மாநகராட்சி பதில் அளிக்க உத்தரவு

மதுரை, நவ. 22: மதுரை, தத்தனேரி மயான வளாகத்தில், நவீன குப்பை இடமாற்று நிலையம் அமைக்கும் பணிகளுக்கு தடை கோரி தாக்கல் ெசய்த வழக்கில், மாநகராட்சி தரப்பில் பதில் அளிக்க ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த மணிகண்டன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தூய்மை பாரத இயக்கம் 2.0 திட்டத்தின் கீழ், தத்தனேரி மயான வளாகத்தில் ரூ.10 கோடியில் நவீன குப்பை இடமாற்று நிலையம் அமைக்க முடிவு செய்துள்ளனர்.

Advertisement

இதற்காக சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு பணிகள் ஏதும் மாநகராட்சி நிர்வாகத்தால் மேற்கொள்ளப்படவில்லை. காற்று மற்றும் நீர் மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு சட்டத்தின் கீழ் பெற வேண்டிய அனுமதி பெறப்படவில்லை. இந்த நவீன குப்பை இடமாற்று நிலையத்தில், நாளொன்றுக்கு 250 மெட்ரிக் டன் பிரிக்கப்பட்ட குப்பைகளைக் கையாளத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிலையம், மக்களின் குடியிருப்புக்கு மிக அருகில் உள்ளதுடன், சுகாதார சீர்கேட்டையும், வைகை ஆற்றை மாசுபடுத்துவதற்கும் வழிவகுக்கும். எனவே, மாநகராட்சியின் இந்த திட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் ஆகியோர், மனுவிற்கு மாநகராட்சி ஆணையர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை டிச.8க்கு தள்ளி வைத்தனர்.

 

Advertisement

Related News