தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆயுதங்களுடன் மக்களை மிரட்டிய அண்ணன், தம்பி உள்பட 3 வாலிபர்கள் கைது

 

Advertisement

மதுரை, நவ. 18: மதுரையில், சாலையில் செல்லும் பொதுமக்களை ஆயுதங்களை காட்டி மிரட்டிய 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பைக், வாள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. மதுரை, தெற்குவாசல் போலீஸ் எஸ்ஐ கோடீஸ்வர மருது தலைமையில் ஏட்டுகள் நாகேந்திரன், இளையராஜா ஆகியோர் அப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது காமராஜர்புரம், முனிச்சாலை பகுதியில் ஒரு பைக்கில் வந்த 3 வாலிபர்கள் ஆயுதங்களை காட்டி பொதுமக்களை மிரட்டுவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து ெசன்றனர். அப்போது திருமலை நாயக்கர் மகால் பகுதியில் நடுரோட்டில் நின்றிருந்த வாலிபர்கள் கைகளில் பெரிய வாள்களை வைத்துக்கொண்டு பொதுமக்களை அச்சப்படுத்தும் வகையில் மிரட்டிக்கொண்டிருந்தனர்.

இதையடுத்து போலீசார் அவர்களை சுற்றி வளைத்து பிடிக்க முயன்றபோது, பைக், ஆயுதங்களை அங்கேயே போட்டு விட்டு தப்பி ஓடினர். அவர்களில் ஒருவர் போலீசாரிடம் சிக்கினார். விசாரணையில் காமராஜர்புரத்தை சேர்ந்த ஆல்வின்(22) என்பது தெரியவந்தது. மேலும் தப்பி ஓடியவர்களில் ஒருவர் ஆல்வினின் அண்ணன் ஆல்பர்ட்(24), மற்றொருவர் சகாயரூபன்(28) என்றும் தெரிந்தது. அவர்களையும் ேபாலீசார் மடக்கினர். அவர்கள் விட்டுச்சென்ற வாள்கள், டூவீலர் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார், வழக்கு பதிவு செய்து மூவரையும் கைது செய்தனர்.

Advertisement