தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கார்த்திகை சோமவாரத்தையொட்டி கோயில்களில் 108 சங்காபிஷேகம்

 

Advertisement

திருமங்கலம் / மேலூர், நவ. 18: கார்த்திகை சோமவாரத்தினையொட்டி திருமங்கலம் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் சிவபெருமானுக்கு 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. மேலும் கார்திகை மாதம் பிரதோஷ சிறப்பு வழிபாடுகளும் நடைபெற்றது. இதனையொட்டி சுவாமி, அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் திருமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இதேபோல் மேலூர் அருகே தும்பைப்பட்டி சிவாலயபுரத்தில் கோமதி அம்பிகை சமேத, சங்கர லிங்கம் சுவாமி கோயிலில் கார்த்திகை மாத, சோமவார பிரதோஷம், 108 சங்காபிஷேக சிறப்பு பூஜை வழிபாடு நேற்று நடைபெற்றது.

இதையொட்டி சங்கரலிங்கம் சுவாமிக்கும், நந்தி தேவருக்கும் எண்ணெய் காப்பு சாற்றி, திரவியம், மஞ்சள், பஞ்சகவ்யம் போன்ற பதினாறு வகையான அபிக்ஷேகங்கள் நடைபெற்றது. பல்வேறு திருத்தலங்களில் இருந்து எடுத்து வரப்பட்ட புனித தீர்த்தம் 108 சங்குகளில் நிரப்பப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடத்தி சங்கரலிங்கம் சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பிரதோஷ மூர்த்திகள் ரிஷப வாகனத்தில் கோயிலை வலம் வந்தனர். பக்தர்கள் கோளறு பதிகம், தேவாரம், திருவாசகம், நந்தியம் பதிகம், சிவபுராணம், சிவன் 108 போற்றி போன்றவற்றை பாராயணம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை சங்கர நாராயணர் கல்வி அன்னதான அறக்கட்டளை நிர்வாகிகள், கோயில் அர்ச்சகர் ராஜேஷ் கண்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.

Advertisement