தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மேலூர் அருகே மாட்டு வண்டி பந்தயம் விறுவிறு இலக்கை நோக்கி சீறிய காளைகள்

 

Advertisement

 

மேலூர், அக். 13: மேலூர் அருகே நடைபெற்ற இரண்டு மாட்டு வண்டி பந்தயத்தில் எல்லையை நோக்கி 46 ஜோடி காளைகள் சீறிப்பாய்ந்ததை திரளான ரசிகர்கள் உற்சாகமாக கண்டுகளித்தனர்.

மேலூர் அருகே உள்ள வெள்ளரிப்பட்டியில், 7ம் ஆண்டு மாட்டு வண்டி பந்தயம் முசுண்டகிரிப்பட்டி முதல் ஆமூர் விலக்கு வரை நேற்று நடைபெற்றது. இதில் பெரிய மாடுகள் பிரிவில் 13 வண்டிகள் பங்கேற்றன. முடிவில் சூரக்குண்டு அமர்நாத், வேட்டையன் முதலிடம், நரசிங்கம்பட்டி முத்துராமலிங்கம், பத்திரகாளி 2ம் இடம், கல்லணை விஸ்வா, ரவிச்சந்திரன் 3ம் இடம், கள்ளந்திரி சிவபிரபு, பாண்டியராஜன் 4ம் இடம் பெற்றனர்.

சிறிய மாடுகள் பிரிவில் 33 ஜோடிகள் கலந்து கொண்டதால், போட்டி இரு பிரிவுகளாக நடத்தப்பட்டது.வெற்றி பெற்ற அனைத்து காளைகளின் உரிமையாளருக்கும் பரிசு தொகை, கேடயம் வழங்கப்பட்டது.

சாலையின் இருபுறமும் திரண்டு நின்றிருந்த ரசிகர்கள், மாட்டுவண்டி பந்தயத்தை உற்சாகமாக கண்டு களித்தனர். மேலூர் மற்றும் ஒத்தக்கடை போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.

Advertisement