தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ரயில்வே தொழிற்சாலை காரணமாக மேம்பால பணிகளில் பின்னடைவு

மதுரை, நவ. 11: ராமேஸ்வரத்திலிருந்து கொச்சி செல்லும் சாலையில் மதுரை - தேனி மார்க்கத்தை தமிழக நெடுஞ்சாலைத்துறையின் தேசிய நெடுஞ்சாலை பிரிவு பராமரித்து வருகிறது. இச்சாலையில் உள்ள ரயில்வே கடவுபாதையை கடக்க கருமாத்தூரில் ரூ.59.38 கோடியிலும், தேனி நகர் பகுதியில் ரூ.92 கோடியிலும், போடி நகர்ப்பகுதியில் ரூ. 7 கோடியிலும் இரு மற்றும் நான்கு வழிச்சாலையுடன் கூடிய மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இதில், நெடுஞ்சாலைத்துறை சார்ந்து பால பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. கருமாத்தூர் மற்றும் தேனி நகர் ஆகிய இடங்களில் ரயில்வே பாலம் சென்னை நேப்பியர் பாலம் வடிவில் மேம்பாலமாகவும், போடியில் சாதாரண இரும்பு கர்டர் மேம்பாலமாகவும் கட்டி இணைக்கப்பட உள்ளன.

Advertisement

இதில், கருமாத்தூர் கர்டர் பாலத்தை இணைக்கும் பணிகள் நடக்கின்றன. அதேநேரம், தேனி மற்றும் போடி பகுதிகளில் உள்ள ரயில்வே பால பணிகளில் பின்னடைவு ஏற்பட்டு, நீண்ட இழுபறிக்கு பின் தொடங்கியுள்ளது. நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறும்போது, ‘சம்பந்தப்பட்ட இடங்களில் ரயில்வே பாலத்திற்கான கட்டுமானம் அரக்கோணத்தில் உள்ள ரயில்வே தொழிற்சாலையில் தொடங்கி உள்ளது. அங்கு, ஒவ்வொரு கட்டங்களிலும் பாலத்தின் கட்டுமானம் மற்றும் அதன் தாங்கும் திறன் குறித்த சோதனை நடத்தப்படும். அவை முடிந்தபின் இங்கு கொண்டுவரப்படும். அதன்பின் பாலத்தில் பொருத்த தடையின்மை சான்றிதழ் பெறப்பட்டு பணிகள் நடக்கும்’ என்றனர்.

Advertisement