தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயரை மதுரை விமான நிலையத்திற்கு சூட்டக்கோரி போராட்டம்

உசிலம்பட்டி, நவ. 11: மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் பெயர் சூட்டக்கோரி, உசிலம்பட்டியில் பாரதிய பார்வட் ப்ளாக் கட்சியினர் சார்பில் சத்தியாக்கிரக போராட்டம் நடத்தப்பட்டது. மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயரை சூட்ட வேண்டும் என்றுஒன்றிய அரசிடம் பார்வட் ப்ளாக் அமைப்பினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக உசிலம்பட்டி தேவர் சிலை பகுதியில் பாரதிய பார்வட் ப்ளாக் தலைவர் முருகன்ஜி தலைமையில் இந்த கோரிக்கையை வலியுறுத்தி நேற்று சத்தியாக்கிரக போராட்டம் நடைபெற்றது. இதற்கு ஆதரவாக அகில இந்திய பார்வட் ப்ளாக், மூவேந்தர் முன்னேற்ற கழகத்தினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் பங்கேற்றனர்.

Advertisement

இந்த போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்த நிலையில், அங்குள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரி முன்பாக அமர்ந்து, அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து உசிலம்பட்டி டிஎஸ்பி சந்திரசேகரன் தலைமையில் 100க்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர். தாசில்தார் பாலகிருஷ்ணன் தலைமையில் அதிகாரிகள் போராட்டத்தினை கைவிடும்படி அதில் பங்கேற்றோருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதனை அவர்கள் ஏற்கவில்லை. இதையடுத்து முருகன்ஜி கைது செய்யப்பட்டு காவல் நிலையம் அழைத்து செல்லப்பட்டார். பின்னர் மாலையில் அவர் விடுவிக்கப்பட்டார்.

Advertisement