தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அரிமளத்தை தனி தாலுகாவாக்க கோரிய மனு முடித்து வைப்பு

மதுரை, செப். 11: அரிமளம் தனி தாலுகா கோரிய மனு முடித்து வைக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் பகுதியைச் சேர்ந்த அண்ணாமலை, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு: திருமயம் தாலுகா அரிமளம் ஊராட்சி ஒன்றியத்தில் 32 கிராம ஊராட்சிகள் உள்ளன. அரசின் திட்டங்கள், வாரிசு சான்றிதழ், வருமான சான்று பெறுதல், பட்டா மாறுதல் என அனைத்து வகையான தேவைகளுக்கும் அரிமளத்திலிருந்து சுமார் 20 கிமீ தொலைவிலுள்ள திருமயம் தாலுகா அலுவலகத்திற்கு தான் செல்ல வேண்டும்.

Advertisement

ஆனால், போதுமான அளவிற்கு போக்குவரத்து வசதி இல்லை. இதனால், பொதுமக்களின் வேண்டுகோளை ஏற்று அரிமளத்தை தனி தாலுகாவாக உருவாக்க தமிழ்நாடு அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டது. ஆனால், இதுவரை எந்தவித மேல் நடவடிக்கையும் இல்லை. தங்களது கோரிக்கையை வலியுறுத்தி கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்ற போது, அரசு தரப்பில் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி, தனி தாலுகா உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. ஆனாலும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.

எனவே, அரிமளம் தாலுகா அமைப்பது குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். இந்த மனுவை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், ஜி.அருள்முருகன் ஆகியோர் விசாரித்தனர். அரசு தரப்பில், கலெக்டரின் பரிந்துரை அரசின் பரிசீலனைக்காக நிலுவையில் உள்ளது என கூறப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், மனுதாரர் கோரிய நிவாரணத்தை நீதிமன்றத்தால் வழங்க முடியாது. இந்த மனு முடித்து வைக்கப்படுகிறது என உத்தரவிட்டனர்.

 

Advertisement