தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கள்ளிக்குடி அருகே 108 ஆம்புலன்சில் நடந்தது பிரசவம்: அழகிய ஆண் குழந்தை பிறந்தது

திருமங்கலம், செப். 11: கள்ளிக்குடி தாலுகா திருமால் அருகேயுள்ள சோழபுரத்தினை சேர்ந்தவர் காட்டுராஜா(28). கூலித்தொழிலாளி. இவரது மனைவி ராஜலட்சுமி(23). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் ராஜலட்சுமி மீண்டும் கர்ப்பமானார். நிறைமாத கர்ப்பிணியான அவருக்கு நேற்று காலை வீட்டில் பிரவசவலி ஏற்பட்டது. உடனே உறவினர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர்.

Advertisement

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியிலிருந்து வந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள், பிரசவ வலியால் துடித்த ராஜலட்சுமியை ஏற்றிக்கொண்டு, கூடக்கோவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு புறப்பட்டு சென்றனர். திருமால் கிராமத்தின் அருகே சென்றபோது பிரசவவலி அதிகரித்து ராஜலட்சுமி துடிக்கவே, ஆம்புலன்சில் வந்த மருத்துவ உதவியாளர் மகேந்திரன் பிரசவத்திற்கான உதவிகளை செய்தார்.

இதன் வாயிலாக ஆம்புலன்சிலேயே ராஜலட்சுமிக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் தாயையும், சேயையும் கூடக்கோவில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். இருவரையும் பரிசோதனை செய்த மருத்துவர்கள் தாய், சேய் இருவரும் நலமுடன் இருப்பதாகவும், பிறந்த குழந்தை 3 கிலோ 300 கிராம் எடை உள்ளதாகவும் தெரிவித்தனர்.

இதையடுத்து தாயையும் சேயையும் காப்பாற்றிய மருத்துவ உதவியாளர் மகேந்திரன், டிரைவர் தாமோதரக்கண்ணன் ஆகியோரை ராஜலட்சுமியின் உறவினர்கள், கிராமமக்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

 

Advertisement