தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஓடும் ஆட்டோவில் இருந்து தவறி விழுந்த டிரைவர் சாவு பயணிகள் இருவர் படுகாயம்

 

Advertisement

மதுரை, அக். 7: மதுரையில், ஓடும் ஆட்டோவில் இருந்து தவறி விழுந்த டிரைவர் பரிதாபமாக பலியானார். அதிலிருந்த இரு பயணிகள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர்.

மதுரை அவனியாபுரம் பகுதியை சேர்ந்தவர் நாகேந்திரன்(50). ஆட்டோ டிரைவரான இவர், நேற்று மாலை அந்த பகுதியை சேர்ந்த 2 பயணிகளை ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு ஆரப்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தார். வழியில் பெரியார் பஸ் நிலையம் அருகே எல்லீஸ்நகர் மேம்பாலத்தில் வந்தபோது, பாலத்தில் வந்த நபர் மீது மோதாமல் இருப்பதற்காக ஆட்டோவை இடதுபுறமாக திருப்பியுள்ளார். இதில் நிலைதடுமாறிய ஆட்டோ சாலையோர தடுப்பில் மோதியது.

அப்போது, நாகேந்திரன் எதிர்பாராதவிதமாக பாலத்தில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ஆட்டோவில் பயணித்த திருப்பூரை சேர்ந்த யசோதை உள்ளிட்ட 2 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு, மதுரை அரசு மருத்துவமனையல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், நாகேந்திரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து டவுன் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement