தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

‘கிரேவி’ தராததால் ஆத்திரம் மாஸ்டரை தாக்கிய 5 வாலிபர்கள் கைது

மதுரை, ஆக. 7: புரோட்டாவிற்கு கிரேவி தராத ஆத்திரத்தில் மாஸ்டர் மீது கல்வீசி தாக்கிய சிறுவன் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். மதுரை அனுப்பானடி பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம்(45). இவர் சிந்தாமணி மெயின் ரோட்டில் உள்ள ஓட்டலில் புரோட்டா மாஸ்டராக உள்ளார். இவர் பணியில் உள்ள ஓட்டலுக்கு சிந்தாமணியை சேர்ந்த ஹக்கீம் மகன் முகம்மதுஅராபத்(18), ராமலிங்கம் மகன் செல்வபிரகாஷ்(20), சசிக்குமார் மகன் கோகுலகண்ணன்(18), சரவணன் மகன் பானுசந்தர்(20) மற்றும் ஒரு சிறுவன் ஆகியோர் நேற்று முன்தினம் இரவு சாப்பிட வந்துள்ளனர்.

அவர்கள் வாங்கிய புரோட்டாவுக்கு ‘ஸ்பெஷல் கிரேவி’ ஊற்றுமாறு கேட்டுள்ளனர். அதற்கு ஆறுமுகம் மற்றும் கடையில் இருந்த கருப்பையா ஆகியோர் அந்த கிரேவி இல்லை என்று கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த 5 பேரும் சேர்ந்து புரோட்டா மாஸ்டர் மீது கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் கீரைத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுவன் உள்பட 5 பேரையும் நேற்று கைது செய்தனர்.