தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

சமயநல்லூர் அருகே வைகையில் மூழ்கி மாணவன் பலி

வாடிப்பட்டி, ஆக. 7: சமயநல்லூர் அருகே வைகையில் குளிக்க சென்ற நான்காம் வகுப்பு மாணவன் ஆற்றில் மூழ்கி உயரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. சமயநல்லூர் பாப்பாத்தி அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் மலைமேகம். பந்தல் அமைப்பாளராக உள்ளார். இவரது மகன் கருப்பு (8). அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று கருப்பு தனது தாய் மாமனான திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையைச் சேர்ந்த முருகன் என்பவருடன், சமயநல்லூர் வைகை ஆற்றுப்பகுதியில் குளிக்க சென்றுள்ளார்.

அப்போது திடீரென ஆற்று நீரில் கருப்பு இழுத்துச் செல்லப்பட்டார். இது தொடர்பான தகவலின் பேரில் சமயநல்லூர் போலீசார் தீயணைப்புத்துறை உதவியுடன் மாயமான கருப்புவை தீவிரமாக தேடினர். ஆனால் சுமார் 2 மணி நேர தேடுதலுக்கு பின், பரவை அருகே வைகை ஆற்றுப் பகுதியில் சிறுவனை அவர்கள் சடலமாக மீட்டனர். இச்சம்பவம் தொடர்பாக சமயநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாமனோடு குளிக்கச் சென்ற பள்ளி மாணவன் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது