தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

ஆட்டோ டிரைவர் கொலை வழக்கில் தலைமறைவான 4 வாலிபர்கள் கைது

மதுரை, ஆக. 6: மதுரை அருகே நடந்த ஆட்டோ டிரைவர் கொலை வழக்கில், தலைறைவான 4 வாலிபர்களை போலீசார் நேற்று கைது செய்தனர். மதுரையை அடுத்த மேல கள்ளந்திரி பகுதியை சேர்ந்த சுதா - கண்ணன் தம்பதியினரின் மூத்த மகன் செல்லப்பாண்டி. ஆட்டோ டிரைவரான இவர் கடந்த 5 மாதங்களுக்கு முன் புதிய ஆட்டோ வாங்க சேமித்த பணத்தை சிலரிடம் கொடுத்து வைத்திருந்தார்.

ஆனால் உரிய நேரத்தில் அவர்கள் பணத்தை திரும்ப தரவில்லை என தெரிகிறது. இதனால் செல்லப்பாண்டிக்கும் அவர்களுக்கம் இடையே தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த 2 தினங்களுக்கு இரவு வீட்டிலிருந்த செல்லப்பாண்டியை சிலர் ‘வா மீட் பண்ணலாம்’ என வாட்ஸ்ஆப்பில் தகவல் அனுப்பி அழைத்துள்ளனர்.

இதனால் அழகர்கோயில் சாலை பகுதிக்கு சென்ற செல்லபாண்டியை நான்கு பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பியது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த அப்பன்திருப்பதி போலீசார் தீவிர விசாரணை நடத்தி ்தலைமறைவான கொலையாளிகளை தேடி வந்தனர். இந்தநிலையில் இந்த படுகொலையில் ஈடுபட்ட தொப்பலாம்பட்டியை சேர்ந்த கோகுல்ராஜ்(21), டி.மேட்டுப்பட்டி நித்தீஸ்வரன்(20), கோணப்பட்டி ஆகாஷ்(20) மற்றும் கம்மாபட்டி வெற்றிவேல்(23) ஆகியோரை நேற்று கைது செய்தனர்.