தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

செல்லூர் கால்வாய் பணி நிறைவு

மதுரை, ஆக. 6: செல்லூர் கண்மாயிண் உபரிநீர் வெளியேறுவதற்காக கட்டப்படும் சிமென்ட் கால்வாய் பணிகள் முடிவடைந்துள்ளதாக நீர்வளத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வைகை ஆற்றின் கீழ் பாசன வசதி பெறும் கண்மாய்களில், முக்கியமானது செல்லூர் கண்மாய். கடந்தாண்டு அக். 25ம் தேதி பெய்த கனமழையால் இக்கண்மாயிலிருந்து உபரிநீர் வெளியேறி ஊருக்குள் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து வெள்ள பாதிப்பை தடுக்க, ரூ. 15.10 கோடியில் 290 மீட்டர் நீளம், 4 மீட்டர் அலகத்தில் புதிதாக சிமென்ட் கால்வாய் கட்டும் பணிகள் கடந்தாண்டு நவம்பரில் துவங்கின. கடந்த மாதம் வரை நடந்த இப்பணிகள், சமீபத்தில் முடிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில்,‘கண்மாயிலிருந்த பழைய மதகுகளை அகற்றி புதிய மதகுகள் பொருத்துவது முதல் கால்வாய் கட்டுவது வரை அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டுள்ளன. இதனால், வரும் பருவமழையின் போது பெருமழை பெய்தாலும் செல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள பாதிப்பு ஏற்படாது. அடுத்தகட்டமாக பந்தல்குடி கால்வாயும் ரூ.70 கோடியில் சீரமைக்கப்பட உள்ளது. இதற்கான அரசாணை இந்த மாத இறுதிக்குள் வரும் என, எதிர்பார்க்கிறோம்,’’ என்றனர்.

 

Related News