தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நோய் தாக்குதலில் இருந்து வாழையை காப்பாற்றலாம் வேளாண் துறையினர் வழிகாட்டல்

மதுரை, அக். 4: நோய் தாக்குதலில் இருந்து வாழையை எளிதில் காப்பாற்றலாம் என, வேளாண் துறையினர் கூறியுள்ளனர். மதுரை மாவட்டத்தில் பெரும்பாலான பகுதியில் வாழை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. வாழையில் முடிக்கொத்து நோய் அதிக அளவில் காணப்படும். இது ஒரு வைரஸ் நோயாகும். இந்த நோய் தாக்கப்பட்ட வாழை மரங்களின் இலைகள் சிறுத்தும், மஞ்சள் நிறம் மற்றும் கரும்பச்சை கோடு, புள்ளிகளுடன் அடுக்கடுக்காக இலைகள் வெளிவரும்.

Advertisement

இந்த வைரஸ் நோய் தாக்கப்பட்ட மரங்களை வெட்டி அப்புறப்படுத்த வேண்டும். மேலும், கன்று நடுவதற்கு முன்பாக கார்போபியூரான் 3ஜி குருணை மருந்தினை 40 கிராம் அளவில் எடுத்து களிமண் குழம்பில் கலந்து கிழங்கில் பூச வேண்டும்.அசுவினி நோயானது வாழை முடிக்கொத்து நோயை உண்டாக்கும் வைரஸ் கிருமியை அதிக அளவில் பரப்புகிறது.

இதனை கட்டுப்படுத்த டைமெத்தோபேட் ஒரு மில்லி அல்லது மெத்தில் டெமட்டான் 2 மில்லி இவற்றில் ஏதேனும் ஒன்றை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தண்டின் மேல் பகுதியில் இருந்து அடி வரை தெளிக்க வேண்டும். இதனை 21 நாள் இடைவெளியில் 3 முறை மேற்கொள்ளவேண்டும். இந்த நடைமுறையை கையாளுவதன் மூலம் நோய் தாக்குதலில் இருந்து வாழையை காப்பாற்றலாம். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

 

Advertisement

Related News