தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கள்ளிக்குடி பகுதியில் பருவ மழைக்கு முன்பாக நடவுப் பணிகள் தீவிரம்: வழிபாட்டுடன் தொடங்கிய விவசாயிகள்

கள்ளிக்குடி, அக். 4: கள்ளிக்குடி பகுதியில் எதிர்வரும் பருவமழைக்கு முன்பாக நாற்று நடும் பணிகளை விவசாயிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கடந்த மாதம் பலத்த மழை பெய்தது. அப்போது மதுரை மாவட்டத்தின் வடக்குப் பகுதிகளில் ஓரளவு மழை பெய்தாலும், பேரையூர், கள்ளிக்குடி உள்ளிட்ட பகுதிகளில் போதிய அளவில் மழை இல்லாமல் போனது. இருப்பினும், இப்பகுதியில் உள்ள வில்லூர், புளியம்பட்டி, கள்ளிக்குடி, அகத்தாபட்டி, வடக்கம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பருவமழையைஎதிர்பார்த்து விவசாயிகள் பலரும் நடவு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

இதன்படி பால் ஒட்டு, அட்சயா உள்ளிட்ட நெல் ரகங்களை வயலில் பாவி நாற்றுகளாக உருவாக்கி இப்பகுதியில் உள்ள பெரும்பாலான விவசாயிகள் தற்போது நடவு பணிகளை துவக்கியுள்ளனர். இதையொட்டி இவர்கள் தமிழ் கலாசாரம் மாறாமல் நாற்றுக்கட்டுகளை வயலின் ஈசானிய மூலையில் வைத்து வணங்கி குலவையிட்டு நடவுப்பணியைத் துவங்கினர். இம்மாத இறுதிக்குள் பருவமழை போதிய அளவில் பெய்யும் என்பது இப்பகுதி விவசாயிகளின் நம்பிக்கையாக உள்ளது.

 

Advertisement

Related News