தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மின் திருட்டில் ஈடுபட்டோருக்கு ரூ.17.07 லட்சம் அபராதம் விதிப்பு அமலாக்கப் பிரிவினர் அதிரடி

மதுரை, நவ. 26: மின்திருட்டில் ஈடுபட்டவர்களுக்கு ரூ.17.07 லட்சம் அபராதம் விதித்து மின் பகிர்மானக் கழக அமலாக்கப்பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தின் மதுரை அமலாக்கப் பிரிவு கோட்ட செயற்பொறியாளர் மனோகரன் தலைமையில், மதுரை, திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் சட்ட விரோதமாக மின்திருட்டில் ஈடுபடுவோர் குறித்து அதிரடி சோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது.

Advertisement

அதன்படி, மதுரை அமலாக்க கோட்ட அதிகாரிகள் கடந்த நவ.6 மற்றும் 7ம் தேதிகளில் தேனி மின்பகிர்மான வட்டத்திற்குட்பட்ட பிரதுகாரன்பட்டி, கோம்பை, அம்மாபட்டி, எரசக்கநாயக்கனூர், கம்பம், கண்டமனூர், கல்லாபட்டி, தேவாரம், அனுமந்தன்பட்டி, கிழக்கு தேனி மற்றும் ஆண்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சோதனைகளில் ஈடுபட்டனர். இதில் சுமார் 14 இடங்களில் சட்ட விரோதமான முறையில் மின் திருட்டுகள் கண்டறியபட்டது. இதனால் மின்வாரியத்துக்கு ஏற்பட்ட இழப்புக்கு ரூ.17 லட்சத்து 7 ஆயிரத்து 244ஐ இழப்பீட்டு தொகையாக மின் நுகர்வோர்களுக்கு விதிக்கப்பட்டது.

மேலும் சம்பந்தப்பட்ட மின் நுகர்வோர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர். மேலும் அவர்கள் குற்றவியல் நடவடிக்கையை தவிர்க்கும் வகையில் முன் வந்து ரூ. 1.04 லட்சத்தை இழப்பீட்டு தொகையை செலுத்தினர். இதுபோன்று மின் திருட்டில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், மின் திருட்டில் ஈடுபடுவோர்கள் குறித்த தகவல்களை 9443037508 என்ற தொலைபேசி எண்ணில் பொதுமக்கள் தெரிவிக்கலாம் எனவும் மின் பகிர்மானக் கழகத்தின் மதுரை அமலாக்கப்பிரிவு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Related News