தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சாலையோர குப்பைகளால் அவதி: அகற்றிட பொதுமக்கள் கோரிக்ைக

 

Advertisement

மதுரை, செப். 22: காதக்கிணறு பகுதியில் ரோட்டோரம் கொட்டப்படும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதால், உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அழகர்கோயில் சாலையில், கடச்சனேந்தலை அடுத்துள்ள காதக்கிணறு பகுதியில் அதிகளவில் பொதுமக்கள் வசிக்கின்றனர். இந்த பகுதியில் ஹோட்டல்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் அதிக எண்ணிக்கையில் செயல்பட்டு வருகின்றன. இப்பகுதியில் சேகரமாகும் குப்பைகளை சாலையோரம் கொட்டுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். இவை அகற்றப்படமால் மாதக்கணக்கில் சேர்வதால் கடும் சுகாதாரக்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே இதனைதடுக்க உரிய நடவடிக்கை தேவை என, பொதுமக்கள்கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, ‘இங்கு முறையாக குப்பை தொட்டிகள் இல்லாததால் பொதுமக்கள் மற்றும் இறைச்சி கடைகள், ஓட்டல்கள், வார சந்தை வியாபாரிகள் தங்களிடம் சேரும் கழிவுககளை பாலித்தீன் பைகளில் கட்டி எடுத்துக்கொண்டு வந்து சாலையோரம் வீசுகின்றனர். இவை அகற்றப்படாமல் மாதக்கணக்கில் கிடப்பதால்வாகன ஓட்டிகள் முதல் அப்பகுதி மக்கள் வரை கடும் சுகாதாரச் சீர்கேட்டால் தவிக்கின்றனர். மேலும் இந்த குப்பைகளில் கிடக்கும் உணவுப்பொருட்களை கால்நடைகள் சாப்பிடுவதால் அவற்றின் உடல்நிலை பாதிக்கப்படுகிறது. தற்போது மழை காலம் தொடங்கியுள்ளதால், நோய்தொற்று பரவும் முன்பாக குப்பைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Advertisement

Related News