தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

மதுரை டவுன்ஹால் ரோட்டில் தெப்பக்குளத்தை சுற்றிய 99 கடைகள் அகற்றம்

மதுரை, ஆக. 12: மதுரை டவுன் ஹால் ரோட்டில் கூடலழகர் பெருமாள் கோயில் தெப்பக்குளம் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த 99 கடைகள் இடித்து அகற்றப்பட்டன. மதுரை நகரின் முக்கியத்துவம் வாய்ந்த டவுன்ஹால் ரோடு பகுதியில் கூடலழகர் பெருமாள் கோயிலுக்கு சொந்தமான தெப்பக்குளம் அமைந்துள்ளது. இந்த தெப்பகுளத்தை சுற்றிலும் ஏராளமான கடைகள் வாடகைதாரர்களாக பல்லாண்டுகளுக்கும் மேலாக இருந்து வந்தனர். இந்நிலையில் அவர்களின் கடைகளை அகற்ற வேண்டும் என கோயில் நிர்வாகம் தரப்பில் உத்தரவிட்டு, கடைகளை அகற்றுமாறு நோட்டீஸ் அளிக்கப்பட்டது. இதனை ஏற்க மறுத்த கடைகளின் உரிமையாளர்கள் நீதிமன்றம், தீர்ப்பாயத்திற்கு சென்றனர். ஆனால் விசாரணை முடிவில் கோயில் நிர்வாகத்திற்கு சாதகமான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில், சென்னை ஐகோர்ட் கிளை கோயில் நிர்வாகத்திடம் கடைகளை ஒப்படைக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்ததை அடுத்து, நேற்று காலை கோயில் நிர்வாகத்தினர் முன்னிலையில், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பொக்லைன் இயந்திரங்கள் உதவியுடன் கடைகள் இடிக்கப்பட்டன. இதன்படி தெப்பக்குளத்தின் நான்கு கரைப்பகுதிகளிலும் இருந்த 99 கடைகளுடன், ஒருபகுதியை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கட்டிடங்களும் இடிக்கப்பட்டன. இதனால் நேற்று இப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.