தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

இரு குழந்தைகள் உயிரிழப்பு எதிரொலி: கல்குவாரி பள்ளங்களில் பாதுகாப்பு அவசியம்: பொதுமக்கள் கோரிக்கை

மதுரை, ஆக. 12: மதுரையில் கல்குவாரி பள்ளங்கள் உள்ள பகுதிகளில் கண்காணிப்பு மற்றும் வேலி உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. மதுரை மாவட்டத்தில் பாண்டியன் கோட்டை, ஒத்தக்கடை, அலங்காநல்லூர், பாலமேடு, கள்ளிக்குடி, உசிலம்பட்டி, வாடிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கல் குவாரிகளுக்காக தோண்டப்பட்ட பெரிய அளவிலான பள்ளங்கள் உள்ளன. பாதை உள்ள பகுதியில் இருந்து 500 மீட்டர் முதல் ஒரு கிலோ மீட்டர் வரை இடைவெளி இருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் கல்குவாரிகள் அமைப்பதற்கு உள்ளன. குவாரிகளை சுற்றிலும் பாதுகாப்பு சுவர் அமைக்க வேண்டும்.

குவாரியின் உரிமம் யார் பெயரில் உள்ளது, எந்த ேததி வரை உள்ளது மற்றும் குவாரியின் ஆழம் மிகுந்த பகுதிகளின் ஆபத்தை அறிவிக்கும் வகையில், எச்சரிக்கை பதாகைகளை கனிம வளத்துறையினர் அமைத்திட வேண்டும் எனவும் உத்தரவுகள் உள்ளன. இந்நிலையில், நேற்று முன்தினம் மதுரை பாண்டியன்கோட்டை பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற குவாரி பகுதிக்குச் சென்ற இரு குழந்தைகள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

* இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது, ‘மாவட்டத்தில் சாலையை ஒட்டிய பகுதிகளில் எங்கெங்கு கல்குவாரிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் உள்ளன என்பதை முறையாக அதிகாரிகள் கண்டறிய வேண்டும். சாலையோரம் உள்ள குவாரிகளை அடுத்துள்ள பகுதிகளில் கண்காணிப்பு, பாதுகாப்பு வேலிகள், மின் விளக்குகள், அபாயகரமான பகுதி என்ற அறிவிப்பு பலகை, தடுப்புச்சுவர் போன்ற பாதுகாப்பு அம்சங்கள் மேம்படுத்த வேண்டும்’ என்றனர்.