தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருமங்கலம் அருகே விஏஓ அலுவலகத்தின் மேற்கூரை பகுதி சேதம்

 

Advertisement

திருமங்கலம் டிச. 8: திருமங்கலம் அருகே காங்கேயநத்தம் கிராமத்தில் உள்ள விஏஓ அலுவலகத்தில், நேற்று முன்தினம் மேற்கூரையில் உள்ள காரைகள் திடீரென பெயர்ந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருமங்கலம் தாலுகாவின் எல்லையில் அமைந்துள்ள காங்கேயநத்தம் கிராமத்திற்குட்பட்டது எரம்பட்டி. இந்த இரு கிராமங்களுக்கும் சேர்ந்து, காங்கேயநத்தத்தில் விஏஓ அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலக கட்டிடம் கட்டி 35 ஆண்டுகளுக்கும் மேலான நிலையில் தனது பலத்தினை இழுந்து வருகிறது. அலுவலக மேற்கூரை சிதிலமடைந்து காணப்படுகிறது. இது குறித்து பொதுமக்கள் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிகிறது.

இந்த கட்டிடத்தில் பணியில் இருக்கும் விஏஓ, தலையாரி மற்றும் அலுவலகத்திற்கு பல்வேறு வேலைகளுக்கு வந்து செல்லும் பொதுமக்கள் ஒரு வித அச்சத்துடன் இருக்கும் நிலை உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை விஏஓ வெள்ளைச்சாமி, தலையாரி சகானா மற்றும் பொதுமக்கள் விஏஓ அலுவலகத்தில் இருந்தனர். அப்போது அலுவலகத்தின் மேற்கூரை பூச்சுகள் திடீரென பெயர்ந்து விழுந்தது. இதனால் விஏஓ மற்றும் பொதுமக்கள் அலறி அடித்துக்கொண்டு வெளியே ஓடினர்.

Advertisement