தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கோரிப்பாளையம் மேம்பால திட்டம்: நில ஆர்ஜித பணிகள் 70 சதவீதம் நிறைவு

மதுரை, செப். 3: கோரிப்பாளையம் மேம்பால திட்டத்திற்காக நில ஆர்ஜித பணிகள் 70 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மதுரை கோரிப்பாளையத்தில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் விதமாக தமிழக நெடுஞ்சாலைத்துறையின் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவு சார்பில் ரூ.190.40 கோடியில் உயர்மட்ட மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது.

Advertisement

இத்திட்டத்திற்காக ஏற்கனவே பல்வேறு கட்டங்களாக நில ஆர்ஜித பணிகள் முடிந்திருந்த நிலையில், மீதமுள்ள 8,375 சதுரமீட்டர் நிலத்தை கையகப்படுத்த வருவாய் நிர்வாக ஆணையரிடமிருந்து சமீபத்தில் அனுமதி கிடைத்தது. வருவாய்த்துறை பரிசீலனையில் நில ஆர்ஜிதம் தொடர்பான கோப்புகள் இருந்தபோதே குறிப்பிட்ட சில கட்டிடங்களை நெடுஞ்சாலைத்துறையும், கட்டிடங்களின் உரிமையாளர்களும் சேர்ந்து இடித்து வந்த நிலையில், முழுவதுமாக நிலம் ஒப்படைக்கப்பட்ட பின் பணிகள் வேகமெடுத்தன.

இதன் வாயிலாக தற்போது வரை, 70 சதவீதம் நில ஆர்ஜித பணிகள் முடிந்துள்ளதாகவும் இரவு, பகலாக பணிகள் நடப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இம்மாத இறுதிக்குள் நில ஆர்ஜித பணிகளை முடித்து தூண்கள் முடிந்துள்ள பகுதிகளில் மேல்தளம் அமைக்கும் பணிகளையும், மற்ற இடங்களில் அணுகுசாலை அமைப்பதற்கான முதற்கட்ட பணிகளையும் துவக்க உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement