தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருமங்கலத்தில் பொக்லைன் மோதியதில் மின் கம்பம் சாய்ந்தது: பலமணி நேரம் மின்தடை

திருமங்கலம், செப். 2: திருமங்கலம் விமானநிலையம் ரோட்டில் பொக்லைன் இயந்திரம் மோதியதால் மின்கம்பம் சாய்ந்து கம்பிகள் அறுந்தன. இதனால் புறநகர் பகுதியில் பலமணி நேரம் மின்தடை ஏற்பட்டதுடன், போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. திருமங்கலம் - மதுரை விமான நிலையம் ரோட்டில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகள் கடந்த ஓராண்டாக நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருமங்கலம் காமராஜபுரம் பகுதியில் வேளாண்மை அலுவலகம் அருகே புதிய பாலத்தினையொட்டியுள்ள வாறுகால் பொக்லைன் இயந்திரம் உதவியுடன் நேற்று தோண்டப்பட்டது. இந்த பணிகளின்போது, எதிர்பாராதவிதமாக அருகில் இருந்த மின்கம்பத்தின் மீது காலை 11 மணியளவில் பொக்லைன் இயந்திரம் மோதியது. இதில் காமராஜபுரம், கற்பகம்நகர், ஆறுமுகம் வடபகுதி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் இரண்டு மின்கம்பங்கள் ரோட்டில் சாய்ந்தது.

Advertisement

இதில் ஒரு மின்கம்பத்தில் இருந்த கம்பிகள் திருமங்கலம் - மதுரை விமான நிலையம் செல்லும் ரோட்டில் அறுந்து விழுந்தன. அந்த நேரத்தில் அப்பகுதியில் யாரும் கடந்து செல்லாததால் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறவில்லை. இந்த சம்பவத்தை அடுத்து அப்பகுதியில் சென்று ெகாண்டிருந்த வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. பொதுமக்கள் அளித்த புகாரினை தொடர்ந்து, உடனடியாக மின்வாரியம் அப்பகுதிக்கான மின்சாரத்தினை துண்டித்தது. இதனால் திருமங்கலத்தின் புறநகர் பகுதியான காமராஜபுரம், கற்பகநகர், ஆறுமுகம் வடபகுதி, சோனைமீனா நகர், மதுராசிட்டி உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது.

நடுரோட்டில் கம்பம் சாய்ந்து மின் கம்பிகள் அறுந்து கிடந்தால் திருமங்கலம் - மதுரை விமானநிலையம் ரோட்டில் வாகன போக்குவரத்து உடனடியாக நிறுத்தப்பட்டது. பெரியார் பஸ் ஸ்டாண்டிலிருந்து அவனியாபுரம், மண்டேலா நகர் வழியாக திருமங்கலம் வரும் டவுன் பஸ்கள் திருமங்கலம் பஸ் ஸ்டாண்டிற்கு செல்ல முடியாமல் வேளாண்மை அலுவலகத்துடன் நிறுத்தப்பட்டு மீண்டும் அங்கிருந்து மதுரைக்கு புறப்பட்டு சென்றது. இதனை தொடர்ந்து மின்வாரிய ஊழியர்கள் சாய்ந்து விழுந்த மின் கம்பங்களை சரிசெய்யும் பணிகளை துவங்கினர். மதியம் 12 மணி முதல் மாலை 6 மணி வரை சீரமைப்பு பணிகள் நடைபெற்ற நிலையில், அதன்பிறகு புறநகர் பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கப்பட்டது.

இது தொடர்பாக அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘ரயில்வே மேம்பால பணிகள் நடைபெறும் விமான நிலையம் ரோட்டில் எவ்வித பாதுகாப்பு நடவடிக்கையும் இல்லாமல் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 20 நாள்களுக்கு முன்பு இப்பகுதியின் அருகே குடிநீர் குழாயினை பொக்லைன் இயந்திரம் உடைத்ததால் நாங்கள் பல நாட்கள் தண்ணீர் கிடைக்காமல் தவிக்கும் நிலை ஏற்பட்டது. தற்போது மின்சப்ளை பாதிக்கப்பட்டுள்ளது. மேம்பால பணிகளைமேற்கொள்வோர், உரிய முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என, நெடுஞ்சாலை, பொதுப்பணித்துறை மற்றும் நகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தவேண்டும்’’ என்றனர்.

Advertisement

Related News