தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மதுராந்தகம் நகராட்சியில் வியாபாரிகளுக்கு சிறிய உணவக கிச்சன் பாக்ஸ்: நகர தலைவர் மலர்விழிக்குமார் வழங்கினார்

மதுராந்தகம்: மதுராந்தகம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளின் தெரு ஓரங்களில் இட்லி, வடை, தோசை சமைத்து விற்பனை செய்யும் பெண்களை நகராட்சி நிர்வாகம் கணக்கீடு செய்து வியாபாரிகள் வாழ்வாதார மேம்பாடு திட்டத்தின் மூலம் நவீன சமையல் உபகரணங்களுடன் சுகாதாரமான முறையில் சமைத்து வழங்கக்கூடிய சிறிய உணவகம் நடத்துவதற்கான கிச்சன் பாக்சை 19 பெண்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நகராட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில், நகராட்சி ஆணையர் (பொறுப்பு) ஆண்டவன் தலைமை தாங்கினார். பொறியாளர் நித்தியா, மேலாளர் ஏழுமலை, நகர அமைப்பு ஆய்வாளர் முரளி, பொது பணி மேற்பார்வையாளர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சமுதாய மேற்பார்வையாளர் மாரியம்மாள் அனைவரையும் வரவேற்றார். இதில், நகர மன்ற தலைவர் மலர்விழிக்குமார் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு கிச்சன் பாக்ஸ் எனப்படும் சிறிய ஓட்டல் நடத்துவதற்கான ஆணையினை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், திமுக நகர செயலாளர் குமார் உள்ளிட்ட தெருவோர வியாபாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Advertisement

Advertisement