தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மதுராந்தகத்தில் மழைநீரில் அடித்துச்சென்ற 100 ஏக்கர் நெற்பயிர் நாற்றுகள்: இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை

மதுராந்தகம்: மதுராந்தகத்தில் 100 ஏக்கர் பரப்பளவில் புதியதாக நடவு செய்யப்பட்ட நெற்பயிர் நாற்றுகள், மழைநீரில் அடித்து செல்லப்பட்டதால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். பெஞ்சல் புயல் காரணமாக, மதுராந்தகம் பகுதியில் பலத்த சூறைக்காற்றுடன் இடைவிடாது 20 சென்டிமீட்டர் அளவிற்கு கனமழை பெய்தது. இதனால், சாலைகளிலும், வாய்க்கா வரப்புகளிலும் தண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக, குடியிருப்புகளையும், விவசாய நிலங்களையும் மழைநீர் சூழ்ந்துள்ளது.
Advertisement

இதனால், மதுராந்தகம் பகுதியில் 100 ஏக்கர் பரப்பளவில் விவசாய நிலங்களில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு புதிதாக நடவு செய்யப்பட்ட நெற்பயிர்கள் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு வாய்க்கால், வரப்பு ஆகிய பகுதிகளில் நெற்பயிர் நாற்றுகள் சிதறி கிடந்துள்ளது. மேலும், விவசாய நிலங்களில் உள்ள மின் கம்பங்களும் சேதமடைந்து காணப்பட்டுள்ளது. இதனைகண்ட விவசாயிகள் கடும் வேதனைக்கு உள்ளாகியுள்ளனர். இவ்வாறு, பாதிப்புக்குள்ளாகிய விவசாயிகள், மழை வெள்ளத்தால் ஏற்பட்ட நெற்பயிர் சேதங்களை, வேளாண்மைத்துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், சேதமடைந்த மின் கம்பங்களின் சரிசெய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Advertisement