தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சொகுசு கப்பல் இன்று புதுச்சேரி வருகை புதுவையில் படகுகளை இயக்க தடை விதிப்பு

புதுச்சேரி, ஜூலை 4: விசாகப்பட்டினத்திலிருந்து சென்னை வழியாக புதுவைக்கு சொகுசு கப்பல் இன்று வருகிறது. 11 மாடிகள் கொண்ட பிரம்மாண்ட இந்த சொகுசு கப்பலில் பல்வேறு வசதிகள் உள்ளது. இந்த சொகுசு கப்பலில் ஆயிரத்து 400 பேர் பயணிக்க முடியும். இந்த கப்பல் முதல்முறையாக இன்று புதுவைக்கு வருகிறது. அந்த கப்பலில் வரும் பயணிகள் படகுகள் மூலம் புதுவை புதிய துறைமுகத்துக்கு அழைத்து வரப்பட்டு, புதுவையை சுற்றிப்பார்க்க பஸ்கள் மூலம் அழைத்து செல்லப்படவுள்ளனர். இந்த சொகுசு கப்பல் வருகைக்கு அதிமுக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில் சொகுசு-கப்பல் வந்து செல்லும் நேரத்தில் படகுகளை இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து புதுவை கடலோர காவல் நிலைய பொறுப்பு அதிகாரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: புதுவை சுற்றுலாத்துறை அறிமுகப்படுத்தும் சொகுசு கப்பல் பயணம் இன்று வெள்ளிக்கிழமை புதுவை புதிய துறைமுக பகுதியில் இயக்கப்பட உள்ளது. எனவே இன்று காலை 9 மணி முதல் முதல் 11 மணி வரையிலும், மாலை 5 முதல் 6 மணி வரையிலும் சுற்றுலா படகுகள், ஸ்கூபா டைவிங், படகுகள், பாய்மர படகுகளை கடல் பகுதியில் இயக்க வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது இதனிடையே இன்று அ.தி.மு.க.வினர் புதிய துறைமுக வளாகத்தில் சொகுசு கப்பலில் இருந்து பயணிகள் வரும் நேரத்தில் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர், என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Related News