தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

ஆலத்தூரில் கிராம உதவியாளரை மீறி மணல் கடத்தி வந்த லாரி எஸ்கேப்

 

பாடாலூர், ஜூலை 11: பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகாவில் மருதையாற்றில் இருந்து அனுமதியின்றி லாரிகளில் மணல் ஏற்றி செல்லப்படுவதாக ஆலத்தூர் தாசில்தார் அலுவலகத்திற்கு ரகசிய தகவல் வந்தது. அதன் பேரில், புஜங்கராயநல்லூர் மருதையாற்றில் கிராம உதவியாளர் கிருத்திகா கடந்த 9ம் தேதி சோதனையில் ஈடுபட்டார். அப்போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரியை மடக்கி நிறுத்தினார். இதையடுத்து லாரியில் சோதனை நடத்தியதில், மருதையாற்றில் இருந்து அனுமதியின்றி மணல் ஏற்றி வந்தது தெரிய வந்தது.

இதுபற்றி கிராம உதவியாளர் வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் குன்னம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் வருவதற்குள் கிராம உதவியாளரை மீறி டிரைவர் லாரியை எடுத்துச் சென்று விட்டார். லாரியின் பின்னால் பைக்கில் வந்த ஒருவரும் தப்பிச்சென்று விட்டார்.

இதுபற்றி விஏஓ கிருத்திகா குன்னம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் புஜங்கராயநல்லூர் கிராமத்தை சேர்ந்த காட்டுராஜா உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தற்போது 4 பேரும் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Related News