தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

லாரி டிரைவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை * மற்றொரு விபத்தில் வேன் டிரைவருக்கு 2 ஆண்டு சிறை * திருவண்ணாமலை கோர்ட் தீர்ப்பு பைக் மீது லாரி மோதி இரண்டு பேர் பலியான சம்பவம்

திருவண்ணாமலை. ஜூன் 15: திருவண்ணாமலையில் பைக் மீது லாரி மோதி இரண்டு பேர் பலியான சம்பவத்தில், லாரி டிரைவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த மேல் பென்னாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ராமகிருஷ்ணன்(50) மற்றும் தமிழரசன் (34). இருவரும், கடந்த 2012ம் ஆண்டு மே 9ம் தேதி திருவண்ணாமலை காமராஜர் சிலை சந்திப்பு பகுதியில் பைக்கில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வேகமாக வந்த லாரி, பைக் மீது மோதியது. இந்த விபத்தில், சம்பவ இடத்திலேயே ராமகிருஷ்ணன் மற்றும் தமிழரசன் ஆகியோர் உடல் நசுங்கி இறந்தனர்.

Advertisement

இதுதொடர்பாக, திருவண்ணாமலை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், லாரி டிரைவர் கமலபுத்தூர் கிராமத்தைச் சேர்ந்த கோபால் மகன் மணி(56) என்பவரை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை, திருவண்ணாமலை தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடந்தது. இந்நிலையில், இந்த விபத்து வழக்கை விசாரித்த நீதிபதி டி.ஜெயசூர்யா நேற்று தீர்ப்பளித்தார். அதில், பைக் மீது லாரி மோதிய விபத்தில் இரண்டு பேர் பலியான சம்பவத்தில் தொடர்புடைய லாரி டிரைவர் மணிக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ₹11 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

அதேபோல், தண்டராம்பட்டு அடுத்த சே.கூடலூர் கிராமத்தைச் சேர்ந்த சடையன் மகன் அண்ணாமலை என்பவர் ராதாபுரம் மெயின் ரோட்டில் கடந்த 2015ம் ஆண்டு மே 25ம் தேதி நடந்து சென்ற போது, அந்த வழியாக வந்த மினி வேன் மோதிய விபத்தில் பலியானார். இது தொடர்பாக, வாணாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மினி வேன் டிரைவர் ஆயுஷ் பாஷாவை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை திருவண்ணாமலை தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கின் தீர்ப்பும் நேற்று வெளியானது. வழக்கை விசாரித்த நீதிபதி டி.ஜெயசூர்யா, மினி வேன் டிரைவர் காட்டாம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த சுல்தான்பாஷா மகன் ஆயுப்பாஷாவுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் ₹6500 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

Advertisement

Related News