தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

குடவாசல் அருகே கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்

 

வலங்கைமான், ஜூலை 4: குடவாசல் அருகே கண்டிரமாணிக்கம் கால்நடை மருந்தகத்திற்கு உட்பட்ட கடலங்குடி கிராமத்தில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

திருவாரூர் கால்நடைப்பெருக்கம் மற்றும் தீவன உற்பத்தி துணை இயக்குநர் விஜயகுமார் மற்றும் உதவி இயக்குனர் சிவகுமார் முகாமினை தொடக்கி வைத்து சிறந்த கிடேரி கண்டு வளர்ப்போருக்கு பரிசு மற்றும் சிறந்த மேலாண்மைக்கான விருதுகளை வழங்கி சிறப்பித்தனர்.

கால்நடைமருத்துவர்கள் சக்திவேல், சோனியா, அருணேஷ்குமார் உள்ளிட்ட கால்நடை உதவி மருத்துவர்கள் குழு, கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி, சினை ஊசி, சினை பரிசோதனை, குடற் புழு நீக்கம்,மலடு நீக்க சிகிச்சை மற்றும் நோய் சிகிச்சை அளித்தனர். கால்நடை ஆய்வாளர் சசிகலா, கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் கார்த்திக், வெங்கடேஷ், அனிதா ஆகியோர் சிகிச்சை அளிக்க உதவி புரிந்தனர். 300 க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. கால்நடை நோய் புலனாய்வு பிரிவு மருத்துவர் கவிப்பிரியா மற்றும் நடமாடும் கால்நடை சிகிச்சை ஊர்தி 1962 திருமூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டு நோய் தடுப்பு முறைகள் பற்றி விவரித்தனர். இறுதியாக கடலங்குடி ஊராட்சி செயலாளர் முகாமிற்கு நன்றி தெரிவித்தார்.