தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மாமியாரை கூலிப்படை ஏவி கொன்ற மருமகளுக்கு ஆயுள் தண்டனை 5 பேருக்கு இரட்டை ஆயுள் திருவண்ணாமலை மகிளா கோர்ட் பரபரப்பு தீர்ப்பு

திருவண்ணாமலை, மே 21: திருவண்ணாமலையில் கூலிப்படையை ஏவி மாமியாரை கொலை செய்த மருமகள் உட்பட 6 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து மகிளா கோர்ட் பரபரப்பு தீர்ப்பளித்தது. திருவண்ணாமலை தாமரை நகர் 10வது தெருவை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற ஆசிரியர் பெருமாள். அவரது மனைவி ஆதிலட்சுமி(60). கடந்த 5.1.2017 அன்று வீட்டில் தனியாக இருந்தபோது, வீட்டுக்குள் நுழைந்த 5 பேர் கொண்ட கும்பல் ஆதிலட்சுமியை சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். ரத்த வெள்ளத்தில் சரிந்து ஆதிலட்சுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதைத்தொடர்ந்து, சம்பந்தப்பட்ட 5 நபர்களும் அங்கிருந்து தப்பிவிட்டனர். இதுதொடர்பாக, ஆதிலட்சுமியின் மகன் சிவசங்கர் கொடுத்த புகாரின் பேரில் திருவண்ணாமலை டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

Advertisement

அதில், ஆதிலட்சுமிக்கும் அவரது மருமகள் சத்யாவுக்கும் இடையே, தனி குடும்பம் நடத்த அனுமதிப்பது தொடர்பாக அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்தது தெரியவந்தது. சென்னையில் உள்ள ஒரு வங்கியில் ஊழியராக வேலை செய்து வந்த சத்யா, இதுகுறித்து அவரது அண்ணன் பிரபுவிடம் முறையிட்டதும் ஆத்திரமடைந்த சத்யாவின் அண்ணன் பிரபு, கூலிப்படையை வைத்து தங்கையின் மாமியார் ஆதிலட்சுமியை படுகொலை செய்ததும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து, ஆதிலட்சுமியின் மருமகள் சத்தியா, அவரது அண்ணன் சென்னை கொரட்டூர் பகுதியை சேர்ந்த சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் பிரபு, திருவண்ணாமலை சமுத்திரம் நகரை சேர்ந்த ஆனந்தவேல் மகன் ஹானெஸ்ட் ராஜ், செல்வம் மகன் சரண்ராஜ், ராமலிங்கனார் தெருவை சேர்ந்த பத்ரி நாராயணன், துராபலி தெருவை சேர்ந்த அப்துல்பரூக் மகன் முகமதுஅலி ஆகிய 6 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

இதுதொடர்பான வழக்கு விசாரணை, திருவண்ணாமலை மகிளா சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. அரசு தரப்பில், சிறப்பு குற்ற பொது வழக்கறிஞர் வீணாதேவி ஆஜரானார். இந்த வழக்கை விசாரித்த மகிளா கோர்ட் நீதிபதி சுஜாதா நேற்று பரபரப்பு தீர்ப்பளித்தார். அதில், கூலிப்படையை ஏவி மாமியாரை கொலை செய்த வழக்கில் மருமகள் சத்யாவுக்கு ஒரு ஆயுள் தண்டனையும், அவரது அண்ணன் பிரபு, கூலிப்படையை சேர்ந்த ஹானஸ்ட் ராஜ், சரண்ராஜ், பத்ரி நாராயணன், முகமது அலி ஆகிய 5 பேருக்கும் இரட்டை ஆயுள் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும், சம்பந்தப்பட்ட 6 பேருக்கும் தலா ₹3 ஆயிரம் அபராதம் விதித்தார். அதைத்தொடர்ந்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட 6 பேரையும் போலீசார் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

Advertisement

Related News