தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

மனைவியை கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை: தேனி கோர்ட் தீர்ப்பு

 

தேனி, ஜூலை 10: மது அருந்த பணம் தராததால், மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தேனி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தேனி மாவட்டம், கடமலைக்குண்டு பகுதியைச் சேர்ந்தவர் கணேசன் (62). இவரது மனைவி அம்சக்கொடி. கடந்த 2022ம் ஆண்டு, மனைவியிடம், மது குடிப்பதற்கு கணேசன் பணம் கேட்டுள்ளார். பணம் தராததால் ஆத்திரமடைந்த கணேசன், மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்து உடலை வீட்டிற்குள் வைத்துள்ளார்.

இது குறித்து தகவலறிந்த போலீசார், உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக மயிலாடும்பாறை போலீசார் வழக்கு பதிந்து கணேசனை கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை தேனி மாவட்ட மகிளா நீதிமன்றத்தில், நீதிபதி அனுராதா முன்னிலையில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிந்ததையடுத்து நேற்று நீதிபதி தீர்ப்பளித்தார். அதில் கணேசனுக்கு ஆயுள் தண்டனை விதித்தும், ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தும், அபராத தொகையை செலுத்தத் தவறினால் கூடுதலாக ஓராண்டு சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பளித்தார்.

Related News