தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

யூரியா உள்ளிட்ட உரங்களை அதிக விலைக்கு விற்றால் உரிமம் உடனடி ரத்து: வேளாண் அதிகாரி எச்சரிக்கை

 

மதுரை, ஜூன் 6: மதுரை மாவட்டத்தில் யூரியா உள்ளிட்ட உரங்களை அதிக விலைக்கு விற்பனை செய்தால், அவர்களின் விற்பனை உரிமம் ரத்து செய்யப்படும் என, வேளாண் இணை இயக்குநர் சுப்புராஜ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியுள்ளதாவது: மாவட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் உர விற்பனையானளர்களுக்கு லைசன்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இவற்றில் 200 தனியார் உரக்கடைகள் உள்ளன. அதேபோல் 176 கூட்டுறவு சங்கங்கள் மூலமாக உர விற்பனை செய்வோர் உள்ளனர். உரம் விற்பனை நிலையங்களை மாவட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

விவசாயிகளுக்கு உரங்களை ஆதார் கார்டு மூலம் பிஓஎஸ் இயந்திரத்தின் உதவியுடன் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். விவசாயிகள் உரிமம் பெற்ற உர விற்பனை நிலையங்களில் மட்டுமே உரங்களை வாங்க ேவண்டும். விவசாயிகளுக்கு யூரியா உள்ளிட்ட உரங்களை அதிகபட்ச விலைக்கு மேல் விற்பனை செய்யும் கடைகளுக்கான உரிமம் ரத்து செய்யப்படும். போலி உரங்கள் விற்பனை செய்வோர் குறித்து மாவட்ட வேளாண் அதிகாரிகளுக்கு விவசாயிகள் புகார் அளிக்கலாம். இவ்வாறு கூறியுள்ளார்.

Related News