தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கடியப்பட்டணம் சிறுவன் கொலை வழக்கில் அரசு தரப்பு மேல்முறையீடு செய்ய வேண்டும் லெனினிஸ்ட் கலெக்டரிடம் கோரிக்கை

நாகர்கோவில், ஜூன் 10: மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் சார்பில் அதன் மாவட்ட செயலாளர் பால்ராஜ் தலைமையில் நிர்வாகிகள் நேற்று குமரி மாவட்ட கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: கடியப்பட்டணம் கிராமத்தைச் சேர்ந்த ஜோகன் ரிஷி என்ற சிறுவன் சில மாதங்கள் முன்பு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டான். பாத்திமா என்ற பெண் நகைக்காக அந்த சிறுவனை கடத்தி கொலை செய்தது தெரிய வந்தது. இந்த வழக்கில் பத்மநாபபுரம் கூடுதல் அமர் நீதிமன்றம் பாத்திமாவுக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு அளித்துள்ளது. மேலும் அவரது கணவருக்கு மூன்று வருட சிறைத் தண்டனை வழங்கி உள்ளது. இந்த கொலை ஆனது ஒரு கொடூர கொலை ஆகும். இந்த கொலை அரிதிலும் அரிதான ஒரு கொலை வழக்காகும். இப்படிப்பட்ட கொலைகளுக்கு அதிகபட்சமாக வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை அல்லது அதிகபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும். எனவே குமரி மாவட்ட நிர்வாகம் இதனை கருத்தில் கொண்டு கொலையாளி பாத்திமாவுக்கு வாழ்நாள் முழுவதும் சிறை கிடைத்திட இந்த வழக்கை மாவட்ட நிர்வாகம் அரசு தரப்பு மேல் முறையீடு செய்ய ஆவன செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Advertisement

Advertisement

Related News