தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சேரங்கோடு, குந்தலாடி குடியிருப்பு பகுதியில் மண் சரிவு

 

Advertisement

பந்தலூர், ஜூலை 3: பந்தலூர் அருகே கொளப்பள்ளி மற்றும் குந்தலாடி பகுதியில் கன மழைக்கு குடியிருப்பு பகுதியில் மண் சரிவு ஏற்பட்டு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம், பந்தலூர் சுற்று வட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த கனமழைக்கு பல்வேறு இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நெலாக்கோட்டை ஊராட்சிக்குட்பட்ட குந்தலாடி சிவன் காலனியில் வசித்து வரும் கூலித்தொழிலாளி வியரட்ணம் மற்றும் அருகில் உள்ள குடியிருப்புகளின் பின்புறம் மண் சரிவு ஏற்பட்டு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர் மழை நீடித்தால் மீண்டும் மண் சரிவு ஏற்பட்டு வீடுகள் சேதம் ஏற்படும் நிலை உள்ளது. மேலும் சேரங்கோடு ஊராட்சி கொளப்பள்ளி பஜார் பகுதியில் உலக மாதா மளிகை கடைக்கு பின்புறம் தடுப்புச்சுவர் இடிந்து விழுந்து பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது.  சேரங்கோடு பஜார் நெடுஞ்சாலை ஓரத்தில் குடியிருப்பு பகுதியில் மண் சரிவு ஏற்பட்டு குடியிருப்பு மற்றும் நடைபாதை பாதிக்கும் சூழ்நிலை உள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மண் மூட்டைகளை அடுக்கி வைத்து பாதுகாப்பு நடவடிக்கையில் அப்பகுதியினர் மேற்கொண்டு வருகின்றனர். சேரங்கோடு ஊராட்சி மன்ற துணை தலைவர் சந்திரபோஸ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மண் சரிவு ஏற்பட்டு பாதிக்கப்பட்ட இடங்களில் தடுப்புச்சுவர் அமைக்க பாதிக்கப்பட்டவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Advertisement

Related News