தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நீலகிரியில் பணிபுரியும் விக்கிரவாண்டி தொகுதி வாக்காளர்களுக்கு வாக்குப்பதிவு அன்று விடுமுறை வழங்க தொழிலாளர் நலத்துறை அறிவுறுத்தல்

 

Advertisement

ஊட்டி, ஜூலை 9: நீலகிரி மாவட்டத்தில் பணிபுரியும் விக்கிரவாண்டி தொகுதி வாக்காளர்களுக்கு நாளை 10ம் தேதி இடைத்தேர்தல் தினத்தன்று கட்டாயம் விடுப்பு வழங்க வேண்டும் என தொழிலாளர் நலத்துறை அறிவுறுத்தியுள்ளது. நீலகிரி மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையாளர் (அமலாக்கம்) தாமரை மணாளன் கூறியிருப்பதாவது, விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதியில் நாளை 10ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

எனவே, நீலகிரி மாவட்டத்தில் கடைகள், வணிக நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், தோட்ட நிறுவனங்கள், உணவு மற்றும் தனியார் துறை நிறுவனங்களில் தினக்கூலி, தற்காலிக மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் உட்பட விக்ரவாண்டி தொகுதியில் வாக்குரிமை பெற்ற தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும். இது சம்பந்தமாக மாவட்டத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு உள்ளது.

ஏதேனும் புகார் இருந்தால் சம்பந்தப்பட்ட அலுவலர்களை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். இதன்படி தொழிலாளர் உதவி ஆணையாளர் (அமலாக்கம்) தாமரை மணாளன்- 9952080800, தொழிலாளர் உதவி ஆணையாளர் (அமலாக்கம்) ஆனந்தன்-9965711725, தொழிலாளர் துணை ஆய்வாளர் பிரகாஷ்-9566121182, தொழிலாளர் உதவி ஆய்வாளர் உஷா நந்தினி-9003596882 ஆகிய எண்கள் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு உதவி ஆணையர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Related News